Monday, July 8, 2024
Home » ஆசிரியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் பள்ளியில் இருந்து மாணவர்கள் டிஸ்மிஸ்: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ஆசிரியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் பள்ளியில் இருந்து மாணவர்கள் டிஸ்மிஸ்: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

by kannappan

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ஜி.கே.மணி(பாமக) பேசியதாவது: தமிழகத்தில் மாணவர் சமுதாயமும், இளைஞர் சமுதாயமும் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. இன்றைக்கு பள்ளிக்கூடம் பக்கத்தில் கஞ்சா விற்கப்படுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். இதையெல்லாம் போக்குவதற்கு பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு கட்டாயம் வேண்டும்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: அடுத்த கல்வியாண்டில் இருந்து வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பு  முதல் ஒரு வாரம் மனநலம், குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு வகுப்பு ஆகிய வகுப்புகளை நடத்திவிட்டு தான் பாடத்திற்கே செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக மாணவர்களை பாதுகாக்கின்ற விதம் இந்த அரசு செயல்படும். மாணவர்களிடம் தற்போது நிறைய கவன சிதறல்கள் இருக்கிறது. மாணவர்களை ஒருமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  2 வருடம் பள்ளிக்கூடம் செல்லாமல் தற்போது புதிதாக பள்ளிக்கூடம் வரும் 12ம் வகுப்பு மாணவர்கள் 1ம் வகுப்பு மாணவர்களின் மனநிலையில் தான் இருக்கிறார்கள். பெற்றோர்களும், பள்ளிக்கூடமும், அரசும் கூட்டு பொறுப்புடன் தான் இதை திருத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்கள் இனி ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, ஒழுக்க இன்மையாக நடந்துகொண்டால் உங்களுக்கு டிசி கொடுக்கும் போது உங்களை தற்காலிகமாக நீக்குவோம். இல்லையென்றால் நிரந்தரமாக நீக்கப்படுவீர்கள். நற்சன்று சான்றிதழில் நீங்கள் எதற்காக நீக்கப்பட்டீர்கள் என்று எழுதியே தருவோம். கைபேசியை பள்ளிகளுக்கு எடுத்துவராத அளவிற்கு நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு  பேசினார். …

You may also like

Leave a Comment

seventeen + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi