ஆக.21 முதல் 26 வரை வீரமலைபாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி

திருச்சி, ஆக.18: மணப்பாறை அருகே வீரமலைபாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளதையொட்டி வரும் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை இப்பகுதியில் பொதுமக்கள் பிரவேசிக்க அனுமதியில்லை என்று திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், ஆகஸ்ட் 21ம் தேதி காலை 7.30 மணி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி மாலை 5.30 மணி வரை 27th BN, ITBP, Alappuzha, Kerala Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருக்கிறது. துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் மேற்கண்ட பயிற்சி தளத்தில் பொதுமக்கள் பிரவேசிக்கக்கூடாது. அதேபோல் கால்நடைகள் நடமாட்டமும் இருக்கக் கூடாது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை