ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

சிவகாசி, ஏப்.14: ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஊராட்சி தலைவர் ராஜபாண்டியன் சிவகாசி தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், சிவகாசி ஒன்றியம் பள்ளப்பட்டி முதல்நிலை ஊராட்சியில் கீழ திருத்தங்கல் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் சிவகாசி மாநகராட்சி எல்லை முதல் காமராஜர் காலனி, முத்தாட்சி மடம் வரை உள்ள மேற்படி சாலையில் இரு பக்கமும் கழிவுநீர் வாறுகால் மற்றும் சாலை அமைக்க வேண்டி உள்ளது. எனவே மேற்படி சாலையையும் லட்சம் தியேட்டர் பின்புறம் உள்ள ஓடையையும் சர்வே செய்து அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது