Monday, July 1, 2024
Home » அவதூறு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு நடிகர் ஜானி டெப்புக்கு ₹116 கோடியை மாஜி மனைவி வழங்க நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு நடிகர் ஜானி டெப்புக்கு ₹116 கோடியை மாஜி மனைவி வழங்க நீதிமன்றம் உத்தரவு

by kannappan

வாஷிங்டன், : முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் ஜானி டெப்புக்கு ₹116 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல நடிகர் ஜானி டெப். இவர், பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைபடங்கள் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடத்து உலகளவில் பிரபலமானவர். இவர் லோரி அனி அலிசன் என்ற பெண் ஒப்பனை கலைஞரை 1983ம் ஆண்டு திருமணம் செய்தார். தம்பதியர், 1985ம் ஆண்டு பிரிந்து விவகாரத்து பெற்றனர். இதையடுத்து, 2015ம் ஆண்டு ஜானி, தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்தார். இந்த மணவாழ்க்கை 2 ஆண்டுகளே நீடித்தது. பின்னர், 2017ம் ஆண்டு ஜானி டெப் – ஆம்பர் திருமண பந்தம் முறிந்தது. விவகாரத்து செய்து கொண்டனர். அதேவேளை, 2019ம் ஆண்டு பிரபல அமெரிக்க பத்திரிக்கையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’-ல் ஜானி டெப்பின், முன்னாள் மனைவி ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், தனது முன்னாள் கணவரான டெப், தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், தான் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி டெப், அவர் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். இழப்பீடாக ₹380 கோடி கோரினார்.  அதேவேளை, ஆம்பர், தனக்கு நஷ்ட ஈடாக ரூ776 கோடி இழப்பீடு வழக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்குகள் அனைத்தும் வெர்ஜீனியா நீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. ஜானி டெப்பிற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயல்பட்டது உறுதியானது. ஜானி மீது ஆம்பர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகளும் போலியானவை. இதன் மூலம் அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர், தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக ரூ78 கோடியும் (10 மில்லியன்), அபராதமாக ₹38 கோடியும் ( 5 மில்லியன்) என மொத்தம் ₹116 கோடி (15 மில்லியன்) வழங்க வேண்டும்ஆனால், கோர்ட்டு அபராதம் விதிக்கும் உச்சபட்ச தொகை அளவு ₹2.71 கோடி (35 ஆயிரம் டாலர்) என்பதால் அபராத தொகையான 10 மில்லியனுக்கு பதில் 35 ஆயிரம் டாலரை செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆம்பர், ஜானி டெப்பிற்கு ரூ80.31 கோடி (10.35 மில்லியன் டாலர்) இழப்பீடாக கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஜானி டெப்பிற்கு எதிராக ஆம்பர் தொடர்ந்த 3 வழக்குகளில் 1 வழக்கில் ஆம்பருக்கு ஆதரவான தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜானி டெப்பின் வழக்கறிஞர்களில் ஒருவர், ‘ஆம்பர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை. பிறரை நம்ப செய்வதற்காக ஏமாற்றும் வேலையில் ஈடுபடும் செயல்’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் ஆம்பருக்கு ஆதரவான தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆம்பருக்கு ரூ15 கோடி (2 மில்லியன் டாலர்கள்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஜானி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்குகளில் அவருக்கு ஆதரவான தீர்ப்புகளே வெளியாகியுள்ளது. இது ஜானிக்கு கிடைத்த வெற்றியாக கருத்தப்படுகிறது. ஜானிக்கு ஆதரவான தீர்ப்புகள் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஜானி டெப் ஆதரவாளர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருவதால் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றது….

You may also like

Leave a Comment

nine + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi