அவதூறு பரப்பிய தொழிலாளி கைது

உடுமலை, ஜூலை 10: உடுமலை அருகே தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஜோத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பில்நெட் (51). கூலித்தொழிலாளி. இவர் தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறையினர், நீதிமன்றம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வந்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பில்நெட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

துரைப்பாக்கம், முகப்பேர் பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் உள்ள 132 பேருந்து நிறுத்தங்களில் பழுதடைந்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி தகவல்