Sunday, October 6, 2024
Home » அளப்பரிய பலன்களை தரும் வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு!!

அளப்பரிய பலன்களை தரும் வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு!!

by kannappan

இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் விரத வழிபாடு சிறந்தது. வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது.சைவ உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக நிலை விளக்கம்தான். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது.இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, விரதம் இருந்து வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தனம் ஆகர்ஷணம் ஆகும்.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம். விநாயகர் அருளை பெறசெவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்கினால் மிக சிறப்பு.சுக்கில சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி வணங்கினால் வெற்றி நிச்சயம்.வலம்புரி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் வணங்கினால் வெற்றி கிடைக்கும். திருமண காலத்தை விரைவில் காண விரதம் இருந்து மஞ்சள் விநாயகரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்தால் பலன் கிடைக்கும். குடும்ப வறுமையை போக்க, முற்றிலும் அகற்ற வெள்ளெருக்கு திரிபோட்டு தீபம் ஏற்ற வேண்டும்.நவக்கிரக தோசம் நீங்க விநாயகர் பின்புறம் தீபம் ஏற்ற பலன் கிட்டும்.1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது…

You may also like

Leave a Comment

sixteen + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi