அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

அலங்காநல்லூர், ஜூலை 4: அலங்காநல்லூர் அருகே மெய்யப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காத்தம்மாள் (70). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் பழைய மண் சுவற்றில் கட்டப்பட்ட ஆஸ்பட்டாஸ் சீட் போட்ட வீட்டில் குடியிருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென வீட்டின் சுவர் இடிந்து காத்தம்மாள் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காத்தம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை