அறப்போர் இயக்கம் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

சென்னை: அறப்போர் இயக்கம் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்தது. 1500 கோடி ரேஷன் பொருட்கள் ஊழல் நடந்ததாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து முகநூலில் காவல்துறை ஆணையருக்கு எதிராக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்  கருத்து வெளியிட்டதாக அவர் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு ஜெயராம் வெங்கடேசன்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் ஜெயராம் வெங்கடேசனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு  தடை விதித்து உத்தரவிட்டார்….

Related posts

மருத்துவ உபகரணங்கள், 100 படுக்கைகளுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹40 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

மாநகர பேருந்தில் ₹200 கொடுத்து டிக்கெட் கேட்ட பயணியை தாக்கிய கண்டக்டர்:  தாம்பரம் அருகே பரபரப்பு  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது