அறந்தாங்கி அருகே 1.29 லட்சம் ரொக்கம் பறிமுதல்

அறந்தாங்கி, மார்ச் 31: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்த சென்ற 1லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும்படை கைபற்றினர். அறந்தாங்கி-புதுவாக்கோட்டை சாலை இடையாறு கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அறந்தாங்கியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 726 பணத்தை கைப்பற்றி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், அறந்தாங்கி ஆர்டிஓவுமான சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

Related posts

ஈரோடு தூய்மையே சேவை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை

தேசிய நெடுஞ்சாலையில் 2 குதிரைகள் பலி