அறந்தாங்கி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல்

 

அறந்தாங்கி,பிப்.9: அறந்தாங்கி அருகே நாகுடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். நாகுடி கடை வீதியில் அதிக அளவில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பணை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து நாகுடி கடை வீதியில் உணவு பாதுகாப்பு துறை அலுலர் ஜேம்ஸ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது கண்ணன் என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து நாகுடி சப் இன்ஸ்பெக்கடர் பிரபாகரன் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறையினர் கடைக்கு சீல் வைத்தனர். இது குறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி