அறந்தாங்கி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் காயம்

அறந்தாங்கி, ஆக.8: அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் நேற்று மாணவ, மாணவிகளை பள்ளிக்கு ஏற்றிவருவதற்காக அறந்தாங்கி அருகே புதுவாக்கோட்டை ரோட்டில் இடையார் வெள்ளாற்று பாலம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேன் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் பள்ளியில் படிக்கும் வனிஷ்கா (5), மித்ரன்( 5), ஜெயகணேஷ் (12), திவ்யா (12), பிவியா (10) ஆகிய 5 மாணவ, மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த சம்பவத்தால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது