அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

அறந்தாங்கி, மார்ச் 31: அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கிழக்கு பார்த்த முகத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு துளசி வடை மலர்களால் மாலை அணிவித்து மகா தீபாரதணை காண்பித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து