அறந்தாங்கியில் சூறை காற்றுக்கு பிளக்ஸ் பேனர் விழுந்து ஒருவர் காயம்

 

அறந்தாங்கி,ஆக.14: அறந்தாங்கி அண்ணா சிலை அருகே நான்கு சாலைகள் சந்திப்பு உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அடித்த சூறாவளி காற்றில் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் கீழே விழுந்து உள்ளது. சில பேனர்கள் காற்றில் பறந்துள்ளது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது பிளக்ஸ் பேனர் விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனே மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க சாலைகளின் ஓரத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் வீதிகளில் பிளக்ஸ் பேனர் வைப்பதை நகராட்சி நிர்வாகமும் போலீசாரும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை