Tuesday, September 17, 2024
Home » அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் பொதுமக்கள் குறைதீர்நாள் முகாமில் அரியலூரில் 500 மனுக்கள் வரப்பெற்றன

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் பொதுமக்கள் குறைதீர்நாள் முகாமில் அரியலூரில் 500 மனுக்கள் வரப்பெற்றன

by Karthik Yash

அரியலூர், ஜுலை 30: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்நாள் கூட்டம் கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மூலம் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலம், கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில், 05 பயனாளிகளுக்கு ரூ.4,05,450 மதிப்பில் பயிர் கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

7 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi