அர்ஜென்டினாவின் மெண்டோசா மாகாணத்தில் பனிப்பொழிவு காரணமாக சுமார் 2,800 வாகனங்கள் அதன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்டோ ரெடென்டர் இன்டர்நேஷனல் பாஸ் வழியாக சிலியை கடக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் கடந்த ஒரு வாரமாக ஓட்டுநர்கள் அவர்களின் லாரிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மேலும் லாரிகளின் மேல் படர்ந்துள்ள பனியானது, வெண்ணிற போர்வை போர்த்தப்பட்டது போல் காட்சியளிக்கிறது.