அரூர்-மொரப்பூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தீவிரம்

அரூர், செப்.30: தர்மபுரியில் இருந்து மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி வழியாக திருவண்ணாமலைக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணிக்காக, ஆயிரக்கணக்கான மரங்கள் அகற்றப்பட்டது. தற்போது சாலை பணிகள் சில இடங்களில் முடிந்துள்ளது. அப்பகுதிகளில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரூரிலிருந்து மொரப்பூர் செல்லும் வழியில், சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது