அரூர் அருகே மது விற்றவர் கைது

அரூர்: அரூர் அடுத்த வாழைத்தோட்டம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று காலை அரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில், மது பாட்டில்களை விற்பனைக்கு எடுத்துச்சென்றது தெரிய வந்தது. விசாரணையில் பேதாதம்பட்டியை சேர்ந்த ராஜா(54) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை