தர்மபுரி, ஜூன் 23: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோயிலில், நேற்று அருணகிரிநாதர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை, மூலவர் ஆறுமுகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்கார சேவையும், சோடச உபசாரம், வேத பாராயணம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருநெறி தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருப்புகழ் பாராயணம் நடந்தது. தொடர்ந்து மேளதாளத்துடன் சிவசுப்பிரமணியர் உடன் அருணகிரிநாதர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
அருணகிரிநாதர் குருபூஜை விழா
previous post