அரியநாயகிபுரம் பஞ்.தலைவரின் மனைவி தற்கொலை

சுரண்டை, செப்.21: சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகில் உள்ள அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் (45). இவர் அரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது மனைவி மஞ்சு(38). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையறிந்த அருகில் உள்ளவர்கள் மஞ்சுவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை மஞ்சு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி