கரூர், மே 19: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு விரைவில் இடம் தேர்வு செய்து நிரந்தர கட்டிடம் கட்டப்படும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார். அரவக்குறிச்சி அரசு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிப்பட்டிக்கோட்டை பழைய மேல்நிலைப்பள்ளியில் அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தற்காலிகமாக நடத்துவதற்காக அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் பிரபுசங்கர் கூறுகையில், தற்போது அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதனை தற்காலிகமாக அரசுககு சொந்தமான இடங்களில் பரிசீலிக்கப்பட்டு, ஆண்டிப்பட்டிக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் இடம் தேர்வு செய்து நிரந்தர கட்டிடம் அமைக்கப்படும். அதுவரை, தற்காலிகமாக இயங்கி வரும் என்று கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில், திருச்சி மண்டல இணை இயக்குநர் (உடற்கல்வித்துறை) குணசேகரன், செயற்பொறியாளர் சிவக்குமார், அரவக்குறிச்சி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வசந்தி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.