Friday, July 12, 2024
Home » அரசு மானிய விலையில் விதை நெல்

அரசு மானிய விலையில் விதை நெல்

by Ranjith

 

சாயல்குடி, செப். 20: திருஉத்தரகோசமங்கை மற்றும் கடலாடி, முதுகுளத்தூர் வேளாண்மை துறை அலுவலகத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், விதை கிராமத்திட்டத்தின் கீழ் மானாவாரி நிலத்தில் நெல், குதிரைவாலி, கேழ்வரகு, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 120-140 நாட்களில் மகசூல் தரக்கூடிய கோ-51, ஏடிடி-45, ஆர்.என்.ஆர் ஆகிய ரக நெல்கள், பிபிடி 5204, என்.எல்.ஆர் சி.34449 மற்றும் 80 நாளில் மகசூல் தரக்கூடிய வம்பன்-8 ரக உளுந்து. 75-90 நாளில் மகசூல் தரக்கூடிய கோ-2 ரக குதிரைவாலி விதைகள், கோ-14, ரக கேழ்வரகு விதைகள் ஆகியவை 50 சதவீதம் 10, 5 சதவீதம் என ரகங்களுக்கு ஏற்ப மானிய விலையில் வழங்கப்படுகிறது.

விதைகள் வாங்கிச் செல்லும் விவசாயிகளுக்கு அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்கள் மற்றும் நுண்ணோ ட்ட உரங்களும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பெயரை பதிவு செய்து, தரமான விதைகளை வாங்கி பயனடைலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

16 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi