அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி; சிறப்பான சிகிச்சை என்று நெகிழ்ச்சி

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மகள் தர்மலாஸ்ரீ (29). இவர் கடந்த 2019ல் நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சேலம் கிச்சிபாளையத்தை  சேர்ந்த மருத்துவர் தாமரைகண்ணனுடன் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான தர்மலாஸ்ரீ, பிரசவத்திற்காக கடந்த மாதம் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.கடந்த 2 வாரமாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் தர்மலாஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் காலை சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. சேலம் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்ததாக உதவி கலெக்டர் தர்மலாஸ்ரீ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்