அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகம்

போச்சம்பள்ளி, ஜூன் 14: போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளன்றே மாணவிகள், உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். புதியதாக சேர்ந்த மாணவிகளுக்கு, தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமையில் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் காளியம்மாள், சிவலிங்கம், பழனி, முருகன், சேகர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்