அரசு பேருந்து மோதி 2 பேர் பரிதாப பலி

விக்கிரவாண்டி, பிப். 13: விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் ராஜி(42). டிரைவராக உள்ளார். இவரது உறவினர் தங்கராசு மகன் பிரபாகரன்(45). புதுச்சேரி பகுதியில் செக்யூரிட்டி பணி செய்து வந்தார். இருவரும் ராஜி வாகனத்தில் முண்டியம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர். அப்போது முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இருசக்கர வாகனத்தின் மோதியது. இதில் ராஜி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிரபாகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜியின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்