அரசு பேருந்து மோதி வாலிபர் பலி

ஒட்டன்சத்திரம், ஜூலை 7: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை செரியன் நகரை சேர்ந்தவர் நவநீத ராஜேஷ்குமார் (21). இவர் நேற்று முன்தினம் இரவு தாராபுரம் சாலையில் அம்பிளிக்கை நவகானி பிரிவு அருகே தனது டூவீலரில் வந்த போது மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே நவநீத ராஜேஷ்குமார் உயிரிழந்து விட்டார். இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை