அரசு பேருந்தில் பயணம் செய்தபோது இளம் பெண்ணிடம் நடத்துனர் சில்மிஷம்

 

மதுராந்தகம், டிச. 12: மதுராந்தகம் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்தபோது இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது 19 வயது மகள் நேற்று சேத்தியாதோப்பில் இருந்து பணி நிமித்தமாக சென்னை செல்வதற்காக, அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து மதுராந்தகம் புறவழிச்சாலை ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது, பேருந்து நடத்துனர், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், இளம்பெண் சத்தம் போட்டதையடுத்து பேருந்தில் இருந்த மற்ற பயணிகளின் உதவியுடன் மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிலையத்தில் இறங்கிய இளம்பெண், மதுராந்தகம் காவல் நிலையம் சென்று குறிப்பிட்ட நடத்துனர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து, பேருந்தின் நடத்துனரான அருணகிரி (47) என்பவர் மீது மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்