அரசு பள்ளி ஹெச்எம் உள்பட 5 பேருக்கு நல்லாசிரியர் விருது

தூத்துக்குடி, செப். 5: முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தனித்தனியாக சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவித்து வருகின்றன. இதன்படி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று (செப்.5ம் தேதி) நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பெர்சியாள் ஞானமணி, காயாமொழி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலகிருஷ்ணன், உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரோனின் சுதா, ஆத்தூர் சி.சண்முக நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் எமர்ஸன் சஞ்சித்சிங், பணிக்கநாடார் குடியிருப்பு கணேசர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜகுமார் ஆகிய 5 பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்