அரசு பள்ளி மாணவி ஹாங்காங் பயணம்

 

கோவை, ஆக. 24: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஹாங்காங் சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். கடந்த 2022-2023 கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி, வினாடிவினா போன்ற மன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 பேர் வீதம் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 2023-2024 அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி, மாவட்டம் அளவிலான மன்ற செயல்பாடுகளில் போட்டிகள் கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான மன்ற போட்டிகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதில், முதற்கட்டமாக 20 மாணவர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவர் மற்றும் அலுவலர் ஒருவர் ஹாங்காங் கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர். இதில், கோவை மாவட்டம் அசோகபுரம் மாடல் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி ஹாங்காங் பயணம் சென்றுள்ளார். மேலும், மாணவர்கள் வரும் 27-ம் தேதி வரை ஹாங்காங் நாட்டில் கல்விச் சுற்றுலா மேற்கொள்கின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி