அரசு பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

 

ராமநாதபுரம், மே 8: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை அரசு பள்ளியின் ஜன்னலை உடைத்து நோட்டுப் புத்தகங்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக நோட்டுப் புத்தகங்கள் ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் இருக்கும் குடோன் அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் நோட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று ரூ.90 ஆயிரம் மதிப்பிலான 12 அட்டைப் பெட்டிகளில் இருந்த நோட்டு புத்தகங்களை திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் சுதாகர் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மக்கள் குறைதீர்நாளில் 565 மனுக்கள்: விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் அமைத்து பராமரிப்போருக்கு விருது: கலெக்டர் அலுலகத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் ரூ30.50 கோடியில் மினி டைடல் பூங்கா: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்