அரசு பள்ளியில் கார்கில் வெற்றிதினம் கொண்டாட்டம்

ராமேஸ்வரம், ஜூலை 27: கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் படை சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர்.கணேசபாண்டியன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமேஸ்வரம் இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் விஜயக்குமார், கார்கில் வெற்றி தினம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை அதிகாரிகள் நிர்மல் கௌசிக் மற்றும் பிரசாந்த், பசுமை படை பொறுப்பாசிரியர் ஜேம்ஸ் ஆனந்தன், போலீஸ் கிளப் ஆசிரியர் லட்சுமணன், மாணவர் படையினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி ஏற்பாடு செய்தார். இறுதியாக ஜே.ஆர்.சி கவுன்சிலர் தினகரன் நன்றி உரையாற்றினார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி