அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் 6வது பட்டமளிப்பு விழா

புழல்: செங்குன்றம் அடுத்த வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் ஆறாவது பட்டமளிப்பு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு  பயிற்சி நிலைய முதல்வர் அமர்நாத் தலைமை தாங்கினார். அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் குழு தலைவர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் தேர்வு பெற்ற 75 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் அலமாதி அரசு மாடல் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் கென்னடி, வடகரை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன் மற்றும் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை