அரசு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

காரிமங்கலம், மார்ச் 14: காரிமங்கலம் அருகே அரசு கல்லூரி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மல்லிகுட்டை பஞ்சாயத்து நீமாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரகு. கூலித் தொழிலாளியான இவரது மகள் வித்யா(20), தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வித்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார், வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை