அரசு கல்லூரி ஆண்டு விழா

சிவகங்கை, ஏப்.16: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் அழக்குச்சாமி வரவேற்றார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலை தேர்வில் உயர் மதிப்பெண் மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. வரலாற்றுத்துறை தலைவர் கலைச்செல்வி நன்றி கூறினார். தமிழ்த்துறை துணைத்தலைவர் ராமமூர்த்தி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை