சிவகங்கை, ஏப்.16: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் அழக்குச்சாமி வரவேற்றார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலை தேர்வில் உயர் மதிப்பெண் மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. வரலாற்றுத்துறை தலைவர் கலைச்செல்வி நன்றி கூறினார். தமிழ்த்துறை துணைத்தலைவர் ராமமூர்த்தி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.