பாப்பாரப்பட்டி, பிப்.11: பென்னாகரம் தாலுகா, மாமரத்துப்பள்ளம் அரசு கலைக் கல்லூரியில், வணிகவியல் தளத்தில் நவீன ஆங்கிலத்தின் தொடர்பு மொழியும், அணுகுமுறையும் என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் ஷகிலா ஷெரீப் வரவேற்று பேசினார்.
சேலம் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார், வணிகவியல் தளத்தில் நவீன ஆங்கிலத்தின் பயன்பாட்டினை பற்றியும், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஜெகதீசன், வணிகவியலில் நவீன ஆங்கிலம் பற்றி பேசினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.