அரசு கலைக்கல்லூரியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

கோவை, ஆக. 1: கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 21 முதுகலை படிப்புகள் வழங்கப்படுகிறது. இதில், நடப்பாண்டில் 557 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை கல்லூரியில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.60 ஆகும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு கட்டணமில்லை. பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள், உதவி மையங்களில், \\”The Director, Directorate of collegiate Education, Chennai\\” -15 என்ற பெயரில் வங்கி வரவோலை மூலம் அல்லது நேரடியாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, ஆக 1: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம். பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு,

ஆழியாறு, சோலையாறு, கூலாங் கல்லாறு, அப்பர் நீரார், கீழ் நீரார், காடாம்பாறை, குரங்கு நீர் வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர், மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படலாம். இதனை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலங்களில் பொதுமக்கள் இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி