Monday, October 7, 2024
Home » அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும்

அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும்

by kannappan

சென்னை: நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி, 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும். பணியிலிருக்கும் போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அதற்கிணங்க, குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கட்டணம் மாதம் ஒன்றிற்கு 110 ரூபாய் என உயர்த்தப்படும். இத்தருணத்தில், அகவிலைப்படியை உயர்த்துவதில் அரசு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை அரசு ஊழியர்கள் நன்கு அறிவார்கள். எனவே அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1-4-2022 முதல் வழங்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழிநடத்தப்படும் இந்த அரசின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.நிலவும் நிதி நெருக்கடியினால் அனைத்து வாக்குறுதிகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றுவது மிகவும் கடினமாகிறது. அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து கவனமாக இந்த அரசு பரிசீலனை செய்து வருகிறது….

You may also like

Leave a Comment

ten + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi