விருதுநகர், செப்.17: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர், பெரியார் பிறந்த தினமான செப்.17ம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
அதன்படி சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறி தள்ளி பெண்களை சமநிலையில் மதித்திடும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்த நாள் செப்.17ம் தேதி அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுக்க அரசு ஆணையிட்டது. அதன்படி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அரசு அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.