அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ மின்னொளி பெயர்ப்பலகை பழுது: சீரமைக்க கோரிக்கை

 

புழல்: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் ‘தமிழ் வாழ்க’ என்ற வாக்கியம் அடங்கிய மின்னொளி பெயர் பலகை அமைக்கப்பட்டது. பின்னர், அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அதனை முறையாக பராமரிக்கவில்லை.

குறிப்பாக சென்னை அருகே உள்ள செங்குன்றம் நாராவாரிகுப்பம் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தின் மேலே பெயர் பலகை பராமரிப்பில்லாமல் உள்ளது. இதேபோல் பல்வேறு அரசு கட்டிடங்களிலும் தமிழ் வாழ்க மின்னொளி பெயர் பலகை இரவில் ஒளிராமல், எழுத்துகள் சிதைந்தும் காணப்படுகிறது.

எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள தமிழ் வாழ்க மின்னொளி பெயர் பலகையை சீரமைத்து ஒளிரச் செய்யவும், பெயர் பலகை வைக்காத அரசு அலுவலகங்களில் புதிதாக தமிழ் வாழ்க மின்னொளி பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று செங்குன்றம், புழல் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜமாபந்தி நிறைவு விழா 235 பேருக்கு சான்றிதழ்கள்: கோட்டாட்சியர் வழங்கினார்