அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

 

ஈரோடு, மே 28: ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், வரலாற்றுத் துறையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இதன்படி, நேற்று நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த 2 கல்லூரிகளில் வரலாறு படிக்கும் மாணவிகளுக்கு உள் விளக்க பயிற்சி துவங்கியது.

80க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கான உள் விளக்க பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியானது 15 நாட்கள் நடக்கும். இதில், அருங்காட்சியகம் பற்றிய விளக்கம், அருங்காட்சியகங்களின் வகைகள், கலை பண்பாடு வளர்ப்பதில் அருங்காட்சியகத்தின் பங்கு, சமுதாயத்தின் அருங்காட்சியகத்தின் பங்கு, அரும்பொருட்களான ஓலைச் சுவடிகள், நாணயங்கள், மர சிற்பங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து, மாணவிகளுக்கு விளக்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்தார்.

 

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை