அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை

திருக்கழுக்குன்றம்: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருக்கழுக்குன்றத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தி, தேர்தல் விதிகளை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தனர். வரும் 6ம் தேதி  நடைபெறவுள்ள  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் சார்பில், அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமை தாங்கினார். எஸ்ஐ விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளைம், முறையாக கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது, பணப்பட்டுவாடா செய்து ஆகிய செயல்களில் ஈடுபட கூடாது. அதுபோல் யாராவது ஈடுபடுவதை அறிந்தால், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்….

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை