அயோத்தியாப்பட்டணம், ஜூன் 12: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, குள்ளம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து வானில் கரிய மேகக்கூட்டம் திரண்டது. மாலை 4.30 மணிக்கு மிதமான மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துச் சென்றது.