அம்மன் கோயில் உண்டியல் திருட்டு

 

அவனியாபுரம், ஜூலை 22: மதுரையை அடுத்த அவனியாபுரத்தில், திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் உள்ளது பத்திரகாளியம்மன் கோயில். இங்கு பிச்சைசாமி(68) என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவில் அவர் கோயிலை பூட்டிச்செல்வதற்காக தேடும்போது, சாவி மாயமானது தெரியவந்தது. இதனால் வீட்டில் இருந்த மாற்றுச்சாவி உதவியுடன் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை கோயில் திறந்து கிடப்பதாக அருகில் உள்ளவர்கள் பிச்சைசாமிக்கு தகவல் அளித்தனர்.

அவர் வந்து பார்த்தபோது, கோயில் உண்டியல் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியல் திருடியவர்களை தேடி வருகின்றனர். கோயில் சாவியை முன்னதாகவே திருடிச்சென்று, நள்ளிரவில் உண்டியலை தூக்கிச்சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை