அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

கோபால்பட்டி, ஜூலை 6: சாணார்பட்டி அருகே வடகாட்டுப் பட்டியில் மலையாள பகவதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், நல்ல மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை