அம்பையில் முன்விரோதத்தில் தாக்கிய வாலிபர் கைது

அம்பை, மார்ச் 7: அம்பையில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை முருகன் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (28). இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பொன்னுசாமி தனது வீட்டின் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் அவரை வழிமறித்து அவதூறாக பேசி தாக்கினார். இதுகுறித்து பொன்னுசாமி அம்பை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அக்னல்விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்