அம்பையில் பைக் மீது தனியார் பஸ் மோதி அதிமுக நிர்வாகி பலி

அம்பை: அம்பையில் பைக் மீது தனியார் பஸ் மோதி அதிமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தை சேர்ந்த கணபதி (70). விவசாயியான இவர் அதிமுக கிளை செயலாளராக இருந்தார். இந்நிலையில் நேற்று தனது வயலில் பயிரிடுவதற்கு மிளகு விதை வாங்க பைக்கில் ஆலங்குளம் சென்று விட்டு அம்பை வழியாக மூலச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அம்பை-கல்லிடைக்குறிச்சி சாலை அபிராமி தியேட்டர் அருகே வந்த போது, நெல்லையில் இருந்து அம்பைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கணபதியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அம்பை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி