அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியர் பலி

அம்பத்தூர்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், விளையாட்டு போட்டிகள் பட்டரைவாக்கம் அருகே உள்ள பொன்னியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை முதல் நடைபெற்ற போட்டிகள் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவுற்றது.
விழா முடிந்தவுடன் அங்கிருந்த பேனர்கள் மற்றும் விழாக்காக அமைக்கப்பட்ட மேடைகளை அகற்றும் பணியில் விசிக இளைஞர் அணி தொண்டர்கள் ஈடுபட்டனர். அப்போது மண்ணூர்பேட்டையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் டில்லி பாபு (25), இரும்பு கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் டில்லிபாபுவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டில்லிபாபுவை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை