அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 20ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை: ஆட்சியர் தகவல்

திருவள்ளூர்;  திருவள்ளுர் மாவட்டத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூரில் வருகின்ற 20ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வருகின்ற 20 ஆம் தேதி வரை www.skilltraniing.tn.gov.in என்ற இணையதள வாயிலாக நேரடி  சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே 8 – ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் +2 தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ. 750 – ம் இலவச பஸ் பாஸ், சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை போன்றவை வழங்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி  சான்றிதழ் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5  ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.இங்கு கம்மியர் கருவிகள் தொழிற் பிரிவுக்கு 2 வருடம் பயிற்சி காலம், அதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கோபா தொழிற் பிரிவுக்கு 1 வருடம் பயிற்சி காலம், அதற்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  செயலகப் பயிற்சி  தொழிற் பிரிவுக்கு 1 வருடம் பயிற்சிகாலம், அதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கட்டிடப்பட வரைவாளர் தொழிற் பிரிவுக்கு  2 வருடம் பயற்சி காலம், அதற்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல் தொழில் நுட்பம் தொழிற் பிரிவுக்கு 1 வருடம் பயிற்சி காலம் அதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்….

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்