அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட 500 பார்: உரிமையாளர்கள் கைது

சென்னை: டாஸ்மாக் பார் ஏலம் விடக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட முயன்ற டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் 500 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் அருகே தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் தலைமையில் நேற்று காலை 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அனைவரும் அமைச்சர் வீட்டை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த அபிராமபுரம் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அன்பரசன் உட்பட 500 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரையும் சமுதாய நல கூடத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை