ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளருக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருவது, அமைச்சர் தரப்பினருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமுதாயரீதியாக வாக்குகளை விலை பேசி வாங்கும் நிலைக்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொரு சமுதாயத்தினரின் கோரிக்கைகளை முதலில் கேட்கின்றனர். பின்னர் அவர்களை நம்பாமல், வெளியூர் அதிமுக பொறுப்பாளர்களை கொண்டு சம்பந்தப்பட்ட சமுதாயத்திற்கு எவ்வளவு வாக்குகள் உள்ளது என கேட்டறிந்து, வாக்களிப்பதற்கான உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு, அதற்கான தொகையை அமைச்சர் தரப்பு அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. …