அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில்கயத்தாறை சேர்ந்த அதிமுக, பாஜவினர் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி, ஏப். 12: கயத்தாறு பகுதி அதிமுக – பாஜவினர், அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கயத்தாறு ஒன்றியத்தை சேர்ந்த பாஜ அமைப்புசாரா தொழில் பிரிவு துணை தலைவர் மாரியப்பன், அதிமுக வழக்கறிஞர் பிரிவு அவைத்தலைவர் பீர்முகைதீன், வழக்கறிஞர் செந்தூர்பாண்டி, இளங்கோவன், சீனிவாசன் மற்றும் அதிமுக, பாஜவை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், தலைமை பேச்சாளர் மைக் மணி, தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பொறியாளர் அணி அன்பழகன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், இளைஞரணி அருண் சுந்தர், அல்பர்ட், மருத்துவ அணி அருண்குமார் மற்றும் மாயகிருஷ்ணன், நம்பி, ராமன், பாபு, சாரதி, நித்யா, நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை